Saturday 20 March 2010

அரக்கர் என்றால்- அழகரோ?

அரக்கர் என்றால்
அழகரே?

சிவனின் மைந்தனோ
இவன் சிந்தித்தானாம்
அனுமன்,
இராவணன் மகன்
இந்திரஜித்தின் அழகில்
மயங்கி

பின் அந்த அனுமன்
மண்டோதரியைக் கண்ணுற்று
இவர் தனோ சீதையெனசிந்தித்தானாம்.

மகிழ்சியாய் அவர் இருந்தைமையால்
துன்புற்றல்லோ சீதையிருப்பார்?
எனத்தெளிந்தானாம்.

அப்படியெனில்
பேரழகியான சீதையோடு
மண்டோதரியின் அழகும் சிறந்ததாகிறதே- பின்

அரக்கரென்பதேன்
அழகில் சிறந்தோர் என்பதினாலோ?
அரக்கர் என்றால் அழகரே............?

No comments:

Post a Comment