Friday 19 March 2010

இவர்கள் இன்று அகதியாம்

அளகாபுரி அமராவதியிலும்
இலங்காபுரி சிறந்ததாம்
வால்மீகி கூறியிருக்கிறார்.

திராவிட நாகரீகம் சிறப்புற்றிருந்தது
அளகாபுரியில், அதைவிட திராவிடம்
இலங்காபுரியில் சிறந்ததாம்.

வால்மீகி இலங்காபுரியை
சுந்தர காண்டத்தில் கூறினார்- பின்னதன்
சிறப்பைக் கூறவும் வேண்டுமோ?

அனுமன் வியந்தானாம்,
சிறப்புக்கு சீர்தூக்கிறார்களே
கவிகள் அளகாபுரியையும், அமராவதியையும்!

இலங்காபுரியை அறியவில்லையே
இவர்கள் -அறிந்திருந்தால்
அதிசிறந்தது இதுவன்றல்லோ கூறியிருப்பர். -என

அனுமன் கண்ட இலங்காபுரி ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைப்போல்,
அழகிய நகராயிருந்ததுவாம்.

இவ்வாறு சிறந்திருந்த நம்
இலங்கையில்-திராவிடம் வாழ்ந்த
இலங்கையில்-

"இவர்கள் இன்று அகதியாம்".

2 comments: